வியாழன், 9 மே, 2024

வடலூர் வள்ளல் பெருமான் தொடர்புடைய இடங்கள் – தமிழ் நாடு - ஆனந்தபாரதி

 

எண்

ஊர் பெயர்

குறிப்பு

1

மருதூர்

வள்ளல் பெருமான் பிறந்த ஊர்

2

சிதம்பரம்

வள்ளல் பெருமான் அருட்காட்சி பெற்றது, திருஅருட்பாவில் பாடல்பெற்றது.

3

சின்னக் காவனம் - பொன்னேரி

வள்ளல் பெருமான் சிறுபருவத்தில் வாழ்ந்த ஊர், வள்ளல் பெருமான் தாயாரின் சொந்த ஊர்

4

ஏழு கிணறு - சென்னை

வள்ளல் பெருமான் சிறுபருவத்தில் வாழ்ந்த ஊர்

5

கந்தக் கோட்டம் – கந்தசாமிக் கோயில் - சென்னை

வள்ளல் பெருமானால் வழிபடப்பட்ட திருத்தலம். திருஅருட்பாவில் பாடல்பெற்றது.

6

சோமுச் சொட்டியார் இல்லம், லிங்கிச் செட்டி தெரு, முத்தியாலு பேட்டை, சென்னை

வள்ளல் பெருமான் சிறுபருவத்தில் முதல் சொற்பொழிவு செய்த இடம்

7

திருஒற்றியூர்

வள்ளல் பெருமானால் வழிபடப்பட்ட திருத்தலம். வள்ளல் பெருமான் வாழ்வில் பல அற்புதங்கள்  நடை பெற்ற இடம். திருஅருட்பாவில் பாடல்பெற்றது.

8

வியாசர்பாடி சென்னை

வள்ளல் பெருமானை பாம்பு பணிந்து வழிபட்டு சென்ற இடம்

9

திருமுல்லை வாயில் - சென்னை

வள்ளல் பெருமானால் வழிபடப்பட்ட திருத்தலம். திருஅருட்பாவில் பாடல்பெற்றது.

10

திருவலிதாயம் - சென்னை

வள்ளல் பெருமானால் வழிபடப்பட்ட திருத்தலம். திருஅருட்பாவில் பாடல்பெற்றது.

11

திருத்தணிகை – திருத்தணி

வள்ளல் பெருமானால் வழிபடப்பட்ட திருத்தலம். திருஅருட்பாவில் பாடல்பெற்றது.

12

வைத்தீச்சுரன் கோயில் – வைத்திய நாதசுவாமிக் கோயில்

வள்ளல் பெருமானால் வழிபடப்பட்ட திருத்தலம். திருஅருட்பாவில் பாடல்பெற்றது.

13

கருங்குழி கிராமம் – குறிஞ்சிப்பாடி வட்டம்

வள்ளல் பெருமான் 9 ஆண்டுகள் வாழ்ந்த ஊர். அற்புதம் பல நிகழ்த்தப்பட்ட ஊர், சங்கம் தொடங்கப்பட்ட இடம்.

14

திருப்பாதிரிப் புலியூர் - கடலூர்

வள்ளல் பெருமான் வந்து உபதேசங்கள் செய்த ஊர்.

15

வடலூர்

வள்ளல் பெருமான் சாலையும் சபையும் நிறுவிய இடம்

16

வேட்டவலம் – விழுப்புரம்

ஜமீந்தாரின் மனைவிகளின் பேயும், நோயும் நீக்கிய ஊர்

17

பின்னலூர் இராமலிங்கேசர் கோயில்– வடலூர் அருகில் உள்ளது

வள்ளல் பெருமானின் வருகை தந்த இடம்

18

புதுப்பேட்டை – பண்ரூட்டி அருகில்

வள்ளல் பெருமான்  சென்று வரட்சி நீக்கி மழைவருவித்த ஊர்

19

விருத்தாசலம்

வள்ளல் பெருமானால் வழிபடப்பட்ட திருத்தலம். திருஅருட்பாவில் பாடல்பெற்றது.

20

திருவதிகை திருக்கோயில்

வள்ளல் பெருமானால் வழிபடப்பட்ட திருத்தலம். திருஅருட்பாவில் பாடல்பெற்றது.

21

திருஎவ்வுளூர்

திருஅருட்பாவில் பாடல்பெற்றது.

22

திருவாரூர்

திருஅருட்பாவில் பாடல்பெற்றது.

23

திருக்கண்ண மங்கை

திருஅருட்பாவில் பாடல்பெற்றது.

24

திருவண்ணாமலை

திருஅருட்பாவில் பாடல்பெற்றது.

25

சித்திவளாகம் – மேட்டுக்குப்பம்

வள்ளல் பெருமான் சித்தி பெற்ற இடம்

26

சீர்காழி

வள்ளல் பெருமான் சென்று வழிபட்ட கோயில்

27

சிங்கபுரி முருகன் கோயில் – குறிஞ்சிப்பாடி


திருஅருட்பாவில் பாடல்பெற்றது.

28

திருநறுங்குன்றம் (தின்ராங்கோட்டை கிராமம்) – ஊளுந்தூர்பேட்டை அருகில் உள்ள சமண மலைக்கோயில்

வள்ளல் பெருமான் தனது சீடர் கல்பட்டு ஐயாவை நேரில் சென்று ஆட்கொண்ட இடம்

29

காரணப்பட்டு – கடலூர் மாவட்டம்

வள்ளல் பெருமானின் அணுக்கத் தொண்டர்களின் ஒருவராகிய ச.மு.கந்தசாமிப் பிள்ளையின் பூர்விகத்தலம், வள்ளல் பெருமானின் உண்மைப் பாத ரச்சை வழிபாட்டில் உள்ள ஊர்



தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அவலத் தழுங்கல் - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை

    அவலத் தழுங்கல்  - திருஅருட்பா பதிகம் ஒரு பார்வை “திருஅருட்பாச் செல்வர்” திரு. ஆனந்த பாரதி. பெங்களூரு. வணக்கம், திரு அருட்பா பதிகங்களையு...