வணக்கம்,
உலகம் உய்ய, ஞானக் களஞ்சியமாகிய, திருஅருட்பாவினை நம்முடைய அருட்தந்தையாகிய திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் நமக்கு அருளிச் செய்திருக்கின்றார்கள். திருவருட்பா பல்வேறு சன்மார்க்க பெரியவர்களான தொழுவூர் வேலாயுதனர், இறுக்கும் ரத்தினம், சிவானந்தபுரம் செல்வராயர், புதுவை வேலு, காரணப்பட்டு கந்தசாமி, ஆ. பாலகிருஷ்ணன் பிள்ளை, ஊரன் அடிகள் முதலிய பல்வேறு அறிஞர்களின் உழைப்பாலும், தியாகத்தினாலும் இன்றைக்கு நம் கையில் அருட்செல்வமாகத் தவழுகின்றது.
இத்திருஅருட்பா ஆறு திருமுறைகளாகவும், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் ஆகவும் விரிந்து இவ்வுலகத்திற்கு மெய்ஞ்ஞான கருத்துக்களை வழங்கி வருகின்றது. அத் திருஅருட்பாவினை அன்பர்கள் உணர்ந்து ஓதி பயன்பெறும் பொருட்டாக, திருவருட்பாவின் பதிகங்களை அன்பர்களுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியே, இக்கட்டுரைத் தொடர்.
முதல் திருமுறை:
4. மகாதேவ மாலை
8. இங்கித மாலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக